அஜீத், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கவுதம் மேனன் இயக்கும் திரைப்படத்திற்கு கடந்த வாரம் ‘என்னை அறிந்தால்’ என்ற டைட்டிலை படக்குழுவினர் அறிவித்தனர். இந்த டைட்டில் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் டுவிட்டர் டிரெண்டில் உலக அளவில் இரண்டாவது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பிடித்தது. அந்த அளவுக்கு இந்த டைட்டில் ரசிகர்களை சென்றடைந்ததாக அஜீத் ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக்கொண்டனர்.
ஆனால் இந்த சந்தோஷத்தை ஒரு வாரம் கூட அஜீத் ரசிகர்களால் கொண்டாட முடியவில்லை. விஜய் ரசிகர்களின் தீவிர ஆராய்ச்சிக்கு பின்னர் இதே டைட்டிலில் ஆபாச நடிகை ஷகிலா நடித்த திரைப்படம் ஒன்று ஏற்கனவே வெளிவந்ததாக வந்த தகவல் வெளிவந்தது. இந்த தகவல் வெளிவந்ததும் அஜீத் ரசிகர்கள் மட்டுமின்றி படக்குழுவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட அஜீத், கவுதம் மேனனை அழைத்து உடனடியாக டைட்டிலை மாற்றும்படி உத்தரவிட்டதாக படக்குழுவினர் வட்டாரத்தில் ஒரு கிசுகிசு கிளம்பியிருக்கின்றது. ஏற்கனவே படத்தின் கிளைமாக்ஸ் குறித்து கவுதம் மேனனிடம் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அஜீத், இந்த டைட்டில் பிரச்சனையால் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.