கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் எங்கே? ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே செய்த உதவி
பெப்ஸி தொழிலாளர்களுக்கான நடிகர்-நடிகைகள் உதவி செய்ய வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி விடுத்த வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் உள்பட பலர் லட்சக்கணக்கில் நிதி உதவி செய்து உதவினார்
இந்த நிலையில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் யாரும் இதுவரை பெப்ஸி அமைப்புக்கு நிதி உதவி செய்யவில்லை. ஆனாலும் லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முதலாக ரூபாய் ஒரு லட்சத்தை பெப்சி அமைப்பு நன்கொடையாக கொடுத்து நடிகைகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதனையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெப்சி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களும் நன்றியை தெரிவித்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.