பிஎஸ்என்எல்-ஐ அடுத்து ஏர்டெல் அறிவித்த அதிரடி அறிவிப்பு

ஏப்ரல் 14 வரை அதாவது ஊரடங்கு உத்தரவு முடியும் வரை பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சேவை துண்டிக்கப்படாது என சற்று முன்னர் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்தது என்பதை பார்த்தோம்

இந்த நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது இதனை அடுத்து ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

ரீசார்ஜ் செய்யப்படாவிட்டால் ரூபாய் 10 ஊக்கத்தொகையாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அந்த பணத்தை அவர்கள் பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இதனை அடுப்பில் ஜியோ உள்ளிட்ட வேறு சில தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply