அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
இன்று காலை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில், தினகரன் ஆதரவளார்கள் 17 பேர் கட்சியில் இருந்து நீக்கம், புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 8ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் துவங்குகிறது. ஆர்.கே நகரில் தினகரன் வெற்றிக்குப் பிறகு நடக்கும் கூட்டம் என்பதால், இரு அணிகளும் தங்களை தயார்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 104 எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், தினகரனுக்கு எதிராகவும், சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பது தொடர்பாகவும் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
பின்னர், தினகரன் ஆதரவாளர்கள் 17 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ கீதா டிடிவி. தினகரன் அணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் செய்யப்பட்டது. பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி, வைகைச் செல்வன் உள்ளிட்ட இந்த 12 பேர் தவிர வேறு யாரும் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.