கொரோனா விவகாரம்: டிரம்பை அடுத்து மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை
உலகம் முழுவதும் கொரோனா மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவிலும் சுமார் 150 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி பொதுமக்களிடையே பேச உள்ளார்
அவர் கொரோனா குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
நேற்று கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், பொதுமக்களிடையே பேசிய நிலையில் இன்று பிரதமர் மோடி பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.