shadow

‘ஷி டாக்சி’யை அடுத்து ‘ஜி டாக்ஸி’. முழுக்க முழுக்க திருநங்கைகளால் ஆனது
g taxo
முழுக்க முழுக்க திருநங்கையினர்களால் நடத்தப்படும் ‘ஜி-டாக்சி’ சேவையை கேரள அரசு விரைவில் துவக்க திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் ஏற்கனவே பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படும், ‘ஷி-டாக்சி’ சேவை, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதேமுறையை பின்பற்றி திருநங்கைகளும் சமூகத்தில் தங்களுக்கென ஒரு முக்கிய அந்தஸ்தை பெறவும், பொருளாதார ரீதியில் மேம்படவும் முழுக்க முழுக்க திருநங்கைகளால் ஆன ‘ஜி-டாக்சி’ எனப்படும் வாடகைக் கார் சேவையை துவக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

கேரள அரசின் சமூக நீதித்துறை, உருவாக்கிய இந்த திட்டத்தின்படி, கார்களின் உரிமையாளராகவும், கார்களை இயக்குபவராகவும் திருநங்கையரே இருப்பர். ‘ஷி – டாக்சி’ திட்டத்தை செயல்படுத்திய, ‘ஜெண்டர் பார்க்’ நிறுவனத்திடம், ஜி – டாக்சி திட்ட பொறுப்பை கேரள அரசு ஒப்படைத்து உள்ளதாகவும் வெகுவிரைவில் ‘ஜி-டாக்சி’ சேவை கேரளாவில் தொடங்கப்படும் என்றும் கேரள அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ‘ஜி-டாக்சி’யில், ஜி.பி.எஸ்., உள்பட பல்வேறு வசதிகள் இருக்கும் என்றும் இந்த ‘ஜி-டாக்சி’யில் ஆண், பெண் என்று பாலின பாகுபாடின்றி யாரும் பயணிக்கலாம் என்றும் இதுவெரு ‘சமத்துவ டாக்சி’ திட்டமாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Today News: After ‘She Taxi’, ‘G Taxi’ will be started very soon in Kerala

Leave a Reply