மோடி கொடுத்த நம்பிக்கையால் ஏற்றம் கண்ட பங்குச்சந்தை

கடந்த ஜனவரி மாதம் கம்பீரமாக இருந்த பங்குச்சந்தை திடீரென கொரோனா பீதி காரணமாக ஆட்டம் கண்டது. சென்செக்ஸ் புள்ளிகள் தினமும் ஆயிரக்கணக்கில் இறங்கியதால் இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டது

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் கொரோன குறித்த அச்சத்தை போக்கும் வகையில் பத்தே பத்து நிமிடம் மட்டுமே பேசினார். அவர் கொடுத்த நம்பிக்கை காரணமாக பங்குச்சந்தை நேற்று ஏற்றம் கண்டது.

நேற்றைய பங்குச்சந்தையில் 2485 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில், 1627.73 புள்ளிகள் உயர்ந்து, 29915.96 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின், ‘நிப்டி’ 482 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 8745.45 புள்ளிகளில் நிலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply