அதிர்ஷ்டவசமாக தப்பித்த ஐஸ்வர்யாராய்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

அதேபோல் அமிதாப்பச்சனின் மகனும் பிரபல இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே உள்ளதாகவும், யாரும் பயப்பட தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

அதேபோல் ஐஸ்வர்யாராய் மகள் ஆராதனாவுக்கும் கொரோனா இல்லை என்பது அவரது குடும்பத்தினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்

Leave a Reply