பிரபு-கவுதமி நடிக்கும் ‘முதல் மரியாதை’ டைப்பில் ஒரு காதல் கதை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘குருசிஷ்யன்’ படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்த நடிகை கவுதமி கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் போற்றப்பட்டதால் நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிப்பை தொடரவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று கவுதமி, மோகன்லாலுடன் நடித்த ‘நமது’ படம் வெளியாகி நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ளது.
இந்நிலையில் 26 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இளையதிலகம் பிரபுவுடன் ஒரு படத்தில் கவுதமி நடிக்கவுள்ளார். கடைசியாக பிரபுவுடன் கவுதமி கடந்த 1990ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘ராஜா கைய வச்சா’ படத்த்ஹில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குனர் இயக்கவுள்ள இந்த படத்தில் பிரபு-கவுதமி முதிர்ச்சி அடைந்த காதலர்களாக தோன்றுவதாகவும், முதல்மரியாதை’ டைப்பில் இவர்களது கேரக்டர் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.