அஜித் இடத்தை 15 வருடங்களுக்கு பின்னர் பிடித்தார் பாபிசிம்ஹா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த பாபிசிம்ஹா, அதன்பின்னர் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற திரைபடத்தின் படப்பிடிப்பு தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புலிகட் என்ற தீவில் நடைபெற்று வருகிறது.
இதே இடத்தில்தான் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் அஜித் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘சிட்டிசன்’ படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் இருந்ததாக காட்டப்பட்டிருந்தது. அஜித் படப்பிடிப்பு நடந்த அதே புலிகட் தீவில் 15 வருடங்களுக்கு பின் பாபிசிம்ஹா படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேசிங்கு இயக்கி வரும் இந்த படத்தில் பாபிசிம்ஹா கூத்து நடிகர் கேரக்டரில் சுமார் 10க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக ஷ்வேதா என்ற நடிகையும் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரனும் நடித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.