shadow

மீண்டும் சமாதானம், மீண்டும் இணைப்பு முயற்சி. கட்சி அலுவலகம் வந்தார் முதல்வர்

அதிமுகவின் இரு அணிகள் இன்று இணையுமா? இணையாதா? என்று குழப்பத்தில் இருந்த நிலையில் சற்றுமுன் இணைப்பு தாமதமாகியதாக தகவல் வந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவருமே தலைமை அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களில் முதல்வர் தலைமை அலுவலகத்தை அடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டு விட்டதாகவும் இன்னும் ஒருசில நிமிடங்களில் இணைப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திமுக கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் ஆட்சியை காப்பாற்ற வேண்டுமானால் முதல்வர் ஈபிஎஸ், தினகரன் காலில் விழுந்தால் அவரை மன்னித்து ஆட்சியை காப்பாற்ற முயற்சி நடக்கும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply