shadow

தேர்தல் ஆணையம் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்?

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் புகார் மனு அளித்தனர். இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் சசிகலாவுக்கு பதிலாக டிடிவி தினகரன் அனுப்பிய பதில் மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையம் சசிகலா கையெழுத்திட்ட விளக்கம் கடிதத்தை வரும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து கூறிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியாராஜன், ‘தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் இறுதி வெற்றிக்கான முதல்படி என்றும் தேர்தல் ஆணையம் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் பட்ஜெட் தாக்கலின் போது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply