shadow

நாங்களும் ஆட்டத்தை தொடங்கிவிட்டோம். திமுக கூறுவது எதை தெரியுமா?

election_12174தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றத்தில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் பிரச்சாரமே செய்யாத இந்த மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்று அந்த வெற்றியை முதல்வரின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற வெறியோடு அதிமுக அமைச்சர்கள் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.,

அதிமுகவின் வேகத்துக்கும் பணத்துக்கும் எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்று திமுகவினரே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு முழுவீச்சில் வாக்குகள் சேகரிப்பு பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுக்கும் பணியையும் அதிமுகவினர் தொடங்கிவிட்டதாகவும் தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் திமுகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் மேலிடத்தில் இருந்து சிக்னல் வந்துவிட்டதாகவும் பணம் கொடுக்கும் வேலையை நாங்களும் விரைவில் தொடங்கி எங்கள் ஆட்டத்தை ஆரம்பித்துவிடுவோம்’ என்று திமுக உடன்பிறப்புகள் கூறி வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

Leave a Reply