குவியும் பாராட்டுக்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஐ.ஏ.ஏஸ் அதிகாரி ஒருவர் தனது ஒரு மாத குழந்தையுடன் அலுவலகத்திற்கு வந்து கொரோனாவை ஒழிக்கும் பணியைச் செய்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கர்ப்பிணியாக இருந்த போதிலும் தனது பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சட்டீஸ்கர் மாநிலத்தின் கூடுதல் எஸ்பி ஆகப் பணி புரிபவர் அமிர்தா ஷோரி. இவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் இருப்பினும் இவர் பிரசவ விடுமுறை எடுக்காமல் தொடர்ச்சியாக தினசரி பணிக்கு வந்து கொண்டிருக்கிறார்

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்படும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த அவர் சாலையில் நின்று தனது பணியை செய்து கொண்டிருக்கிறார். போலீஸ் அதிகாரிகளின் ஆதரவும் மக்களின் ஆதரவும் இவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் போன்ற சின்சியரான பணியாளர்களால் கொரோனா நம் நாட்டை விட்டு விரைவில் வெளியேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply