ரஜினி பேசிகிட்டேதான் இருப்பார், அரசியலுக்கு வரமாட்டார். கஸ்தூரி
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பதுதான் கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் ஓடி வரும் ஹாட் டாபிக். இதுகுறித்து கருத்து தெரிவிக்காத தலைவர்களே இல்லை. திரையுலகிலும் இதுகுறித்து ஒருசிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக அரசியல் உள்பட பல்வேறு விஷயங்களை போல்டாக பேசி வரும் நடிகை கஸ்தூரி, ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
‘நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவரை… ‘போர்’ அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது.
கஸ்தூரியின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.