முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தது ஏன்? நடிகை வரலட்சுமி விளக்கம்
பிரபல நடிகையும் நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமார் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் திரையுலகில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர் முதல்வருடன் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.
முதல்வரின் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை வரலட்சுமி, ‘மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்றும் பெண்கள் பாதிக்கப்பட்ட வழக்குகளில் 6 மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக வரலட்சுமி கூறினார்.
நடிகை வரலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அனைவரும் பெண்களுக்கான உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும்’ என்றும் வலியுறுத்தி வருகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.