ஸ்ரீதேவியின் உடல் வர இன்னும் 3 நாட்கள் ஆகுமா? இந்திய தூதரின் அதிர்ச்சி தகவல்
துபாயில் கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வருவதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆக வாய்ப்பு இருப்பதாக துபாய்க்கான இந்திய தூதரக அலுவலகம் அறிவித்துள்ளது.
ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் பரிசோதனை முடிந்துவிட்டாலும் சட்ட நடைமுறைகளைச் செய்து முடித்து ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்குத் திருப்பி அனுப்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம் என ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் நவ்தீப் சூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்ரீதேவியின் மறைவு தொடர்பான செய்தியில் ஊடகங்கள் காட்டும் ஆர்வத்தை புரிந்துகொள்ளமுடிகிறது. முடிந்தவரை விரைவில் உடலை அனுப்புவதற்கு துபாய் அதிகாரிகளுடன் தான் முயற்சி செய்து வருகிறோம், இதேபோன்ற மற்ற நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது உடலை மும்பைக்கு அனுப்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதேவி குடும்பத்தினருடனும் அவருடைய நலம் விரும்பிகளுடனும் தான் எப்போதும் தொடர்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.