shadow

பிரபல தமிழ் நடிகை வங்கியில் மோசடி செய்த ரூ.36 லட்சம்

‘ஈரம்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை சிந்துமேனன், பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.36 லட்சம் மோசடியாக கடன் பெற்று வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

நடிகை சிந்துமேனன், தனது சகோதரர் பெற்ற கடனுக்கு தனது சொத்துக்களை வங்கியில் உத்தரவாதமாக கொடுத்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த சொத்துக்களின் ஆவணங்கள் போலியானது என்று தெரிய வந்துள்ளது. இதுக்குறித்து வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்துமேனனின் சகோதரரும் இன்னொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிந்துமேனன் தற்போது கணவருடன் லண்டனில் வசித்து வருவதால் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply