சமூக வலைத்தளத்தில் வைரல்

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் நடிகைகள் பலர் தங்கள் வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே

அந்த வகையில் பிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி என கூறப்பட்ட் நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் மொத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பொதுமக்கள் அனைவரும் மதித்து தான் ஆக வேண்டும் ஏனெனில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு முக்கியமான முடிவு ஆகும்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது

எனவே முழு ஊரடங்கு உத்தரவால் மட்டும்தான் கொரோனாவால் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில் நாம் உள்ளோம்

நீங்கள் எல்லோரும் வீட்டிற்கு தேவையானவற்றை வாங்கி வைத்திருப்பீர்கள், அவையெல்லாம் வீட்டில் இருக்கும் என்று நினைக்கின்றேன். எனவே 29ஆம் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். மேலும் மே 3ஆம் தேதி வரை அனைவரும் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஊரடங்கு முடிந்த உடனும் மக்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்பதையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார்

Leave a Reply