shadow

தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நடிகையும் ஆந்திர எம்.எல்.ஏவுமான ரோஜா சந்தித்து பேசியுள்ளார்.

இரு மாநில தொடர்பான பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசினோம் என்றும், பிரச்சினைகளை கேட்டறிந்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்றும், முதல்வர் உடனான சந்திப்புக்கு பிறகு ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா பேட்டியளித்தார்.

ஆந்திரா, நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த பட்டு சால்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் எம்.எல்.ஏ ரோஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.