கருப்ப்புப்பண பதுக்கல்காரர்களுக்கு உதவிய வங்கி அதிகாரி தற்கொலை
கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு உதவியதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரில் பண மேலாண்மை துறையில் பணியாற்றி வந்தவர் ரவிராஜ் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் வங்கியில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய குழுவின் சோதனையில், ரவிராஜின் மோசடி உறுதி செய்யப்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கியதால் ம்ன அழுத்தம் அடைந்த ரவிராஜ் நேற்று தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விவேக் நகர் காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.