shadow

சென்னை மெரினா கடற்கரையில் விபத்து: கர்ப்பிணி பரிதாப பலி

சென்னை மெரினா கடற்கரை சாலையில் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன் மற்றும் மனைவி படுகாயம் அடைந்தனர்

இதில் திருவல்லிக்கேணி சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது

மேலும் அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடியதாகவும் ஆனால் 8 மாத கருவாக இருந்த அந்த குழந்தையும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளன

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடற்படைக்குச் சொந்தமான பேருந்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது