shadow

தமிழகத்தில் ஏசி பேருந்துகள் இயங்குவது எப்போது? போக்குவரத்து துறை தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பேருந்துகளை இயங்கி வருகின்றன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏசி பேருந்துகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் 60 நகரப் பேருந்துகள் மற்றும் 642 புறநகர் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஏசி பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சானிடைசர் மூலம் கைகளால் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.