shadow

ஜனநாயகத்தை காப்பாற்ற ப.சிதம்பரம் குடும்பத்தை கொல்வதுதான் சிறந்த வழி. டுவிட்டரில் அதிர்ச்சி பதிவு

pcஃபேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பிரபல அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல் உள்ளிட்ட மிரட்டல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று டுவிட்டரில் ராஜகோபாலன் என்ற நபர் ‘ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ப.சிதம்பரத்தையும் அவரது குடும்பத்தையும் கொல்வதுதான் சிறந்த வழி’ என்று டுவீட் செய்துள்ளார். இந்த டுவீட் ப.சிதம்பரம் உள்பட காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ராஜகோபாலன் என்ற நபருக்கு அப்படி என்ன ப.சிதம்பரம் மீது கோபம் என்று பார்த்தால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரை தான் என்று கூறப்படுகிறது.

அந்த பத்திரிகையில் சிதம்பரம் சர்ஜிக்கல் அட்டாக் குறித்து தனது விமர்சனத்தை கட்டுரையாக எழுதியிருந்தார். அதில், ‘இது முதல்முறையாக இந்திய ராணுவம் மேற்கொண்டதுபோல், மத்திய அரசு பேசிவருகிறது. ஆனால் இதுபோன்ற சர்ஜிக்கல் அட்டாக்கினை ஏற்கெனவே பல முறை நமது ராணுவம் நடத்தியுள்ளது. அதைப் பற்றிய விஷயங்களை வெளியிடுவது அவசியமில்லை. ஆனால், இதையும்கூட இப்போது மத்திய அரசு அரசியலாக்கி வருகிறது’ என்ற ரீதியில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கட்டுரையால் ஆத்திரம் அடைந்த ராஜகோபாலன் மிரட்டல் பதிவை செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் ஐ.டி துறையில் பணிபுரியும் நபராக இருக்கலாம் என்றும் இன்னும் ஓரிரு நாட்களில் ராஜகோபாலனைப் பிடித்துவிடுவோம்” என்றும் காவல்துறையினர் கூறிவருகின்றனர்.

Leave a Reply