shadow

செய்யாத்துரைக்கு சம்மன்! இன்று மாலைக்குள் ஆஜராக வருமானவரித்துறை அதிரடி

நெடுஞ்சாலை ஒப்பந்தகாரரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் அருப்புக்கோட்டை தொழிலதிபர் செய்யாதுரை வீட்டில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தது தெரிந்ததே. இந்த சோதனையில் ரூ.182 கோடி ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

இந்த நிலையில் செய்யாத்துரை, நாகராஜன், தீபக், பூமிநாதன், ஜோன்ஸ் உட்பட 15 பேருக்கு வருமானவரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யதுரை உட்பட 15 பேரும் இன்று மாலைக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்று மாலை செய்யாத்துரை உள்பட 15 பேர்களிடமும் விசாரணை முடிந்தபின்னரே அவர் கைது செய்யப்படுவரா? என்பது குறித்து தெரியவரும் என்று வருமானவரி வட்டாரங்கள் கூறுகின்றன

 

Leave a Reply