இந்த தவறுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் காரணம். பாகுபலி இசையமைப்பாளர்
எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெறும் பத்தே நாட்களில் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானியிடம் ரசிகர் ஒருவர் ஆதங்கத்துடன் கேள்வி கேட்டுள்ளார்.
இத்தனை பெரிய பட்ஜெட் படத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற பாடர்கள் யாரையும் எம்.எம்.கீரவானி பயன்படுத்தாதது ஏன் என்பதே அவருடைய கேள்வி. இந்த கேள்விக்கு பதிலளித்த எம்.எம்.கீரவாணி, ‘இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள், அவர் இசையமைக்கும் படங்களில் பெரும்பாலான புதிய பாடகர், பாடகிகளையே அறிமுகம் செய்தார். அவர் பாணியில் நானும் புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன். இது தவறு என்றால் இந்த தவறுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் காரணம்’ என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானைவிட சீனியர் மற்றும் அனுபவஸ்தரான கீரவானி, ரஹ்மான் பாணியை பின்பற்றுவதாக கூறியது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.