shadow

குஷ்பு, விஜயதரணி மீது தேர்தல் பார்வையாளர் போலீஸில் புகார்
kushboo
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் இம்முறையும் வெற்றி பெற தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் விஜயதரணியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு நேற்று பிரச்சாரம் செய்தார். விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட குழித்துறை என்ற பகுதியில் குஷ்பு7,  காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணியை ஆதரித்து பேசினார். ஆனால் குழித்துறை பகுதியில் பிரசாரம் செய்ய முறையாக அவர் அனுமதி வாங்கவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து விளவங்கோடு தேர்தல் பார்வையாளர் டேவிட் ஜெபசிங் களியக்காவிளை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நடிகை குஷ்பு, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி ஆகியோர் மீது அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக களியக்காவிளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply