shadow

மனைவியாக இருந்தாலும் 15 வயது சிறுமியுடன் உறவு கொள்வது பலாத்காரமா? சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
child marriage
‘இண்டிபன்டென்ட் தாட்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவில், ஒரு ஆண் 15 வயது முதல் 18 வயது உள்ள ஒரு சிறுமியை திருமணம் செய்து , அவர் தனது மனைவியாகவிட்டார் என்ற உரிமையுடன் பாலியல் உறவு கொள்வது ஏற்புடையதல்ல. மனைவியாகவே இருந்தாலும் அவர் மைனர் ஆவார். எனவே மைனர் மனைவியுடன் உறவு கொள்வதும் பாலியல் பலாத்காரமே என சுப்ரீம் கோர்ட் அறிவிக்க வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம் 375-ன் கீழ் ஒரு ஆண் தன் மனைவிக்கு 15-க்கு மேல் ஆகியிருந்தால் அவருடன் உறவு கொள்வது பலாத்காரமாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அரசியல் சட்டப் பிரிவுகள் 14,15, 21 ஆகியனவற்றிற்கு எதிரானதாக உள்ளது. இந்த சட்டத்தில் தேவையான திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375, பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள பாக்ஸோ (POCSO) சட்ட விதிமுறைகளை மீறுவதாகவும் உள்ளது” என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த பொதுநல வழக்கு நேற்று நீதிபதி மதன்.பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் தேவையான விளக்கத்தை மனுதாரருக்கு அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

Leave a Reply