சென்னை விசா மையத்திற்கு வந்த ஒரே ஒரு நபரால் தேடப்படும் நூற்றுக்கணக்கானோர்: அதிர்ச்சி தகவல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்திற்கு கடந்த மார்ச் 15ஆம் தேதி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது
இதனை அடுத்து அதே நாளில் அந்த விசா மையத்திற்குவந்தவர்கள் அனைவரும் தங்களை தாங்களே தனிமை வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
மேலும் விசா மையத்திற்குவந்த அந்த நபர் வேறு எங்கு எங்கெல்லாம் இந்த 15 நாட்களில் சென்றார் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதன் பின்னர் அந்தப் பகுதியில் உள்ளவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த ஒரே ஒரு நபரால் தற்போது நூற்றுக்கணக்கானோர் தேடப்பட்டு வருகின்றனர்.,
Leave a Reply
You must be logged in to post a comment.