shadow

காலில் விழுவது போல் நடித்து கன்னத்தில் எம்.எல்.ஏவை அறைந்த மர்ம நபர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளுர் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் லசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவரை நோக்கி அதிமுக தொண்டர்கள் பலர் வந்து அவரை வரவேற்றனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் எம்.எல்.ஏவின் காலில் விழுவது போன்று வந்தார். பின்னர் திடீரென எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் எம்.எல்.ஏவை கன்னத்தில் அறைந்த மர்ம நபரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த வசந்தமணி என்பது தெரியவந்தது. அவர் எதற்காக எம்.எல்.ஏவை அடித்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்,.

Leave a Reply