கொரோனா நிதியுதவி

கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகள் திரையுலகினர் உள்பட பலர் அரசுகளுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கோடிக்கணக்கில் குவியும் இந்த நிதி உதவியின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் கோவையில் 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் தனது தம்பி மற்றும் தங்கை ஆகியோர் சேர்த்து வைத்திருந்த ரூபாய் 7 ஆயிரத்தை தமிழக அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களிடம் கொரோனா தடுப்புநிதியாக அளித்து உள்ளார்

இந்தசிறுவனுக்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply