மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்
பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர் குழு அவரது அலுவலகத்தை முழுவதுமாக சோதனையிட்டதில், அந்த தொலைப்பேசி அழைப்பு பொய்யானது என தெரியவந்தது.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய இருப்பதகாவும், அதை நீக்க வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து கண்டுகொள்ளப்படாததால், இந்த பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸார் சந்தேகப்படும் நபர்களிடமும், தொலைப்பேசி எங்கிருந்து வந்தது என்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.