பிரதமர் மோடிக்க்கு ராக்கி கட்டிய 103 வயது மூதாட்டி
சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ரக்சாபந்தன் நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு 103 வயது மூதாட்டி ஒருவர் ராக்கி கட்டியது நெகிழ்வான நிகழ்ச்சியாக இருந்தது
50 ஆண்டுகளுக்கு முன்னர் தனது சகோதரரை இழந்த இந்த மூதாட்டி பிரதமர் மோடியை தன்னுடைய சகோதரராக பார்ப்பதாகவும், அவருக்கு ராக்கி கட்ட விருப்பப்படுவதாகவும் தனது மகனிடம் தெரிவித்துள்ளார்
தனது தாயின் ஆசையை பிரதமருக்கு மகன் கடிதமாக எழுத நேற்று அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மூதாட்டியை தனது இல்லத்திற்கு வரவழைத்த பிரதமர் மோடி, மூதாட்டியின் ராக்கி கயிறை அன்புடன் பெற்று கொண்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.