shadow

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளன

இந்த நிலையில் திடீரென 9 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

மேலும் 9 மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது