shadow

அதிமுகவில் இருந்து 9 எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் நடவடிக்கை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அதிமுக தலைமை எடுத்து வருகிறது. ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட தினகரன் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது 9 எம்.எல்.ஏக்களும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த 9 எம்.எல்.ஏக்களும் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோதண்டபாணி, ஜெயந்தி பத்மநாபன், கலைச்செல்வன், எஸ்.ஜி.சுப்பிரமணியன், மாரியப்பன், கென்னடி, எஸ்.முத்தையா, ஆர்.சுந்தர்ராஜ், கதிர்காமு ஆகியோர்களின் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. மேலும் உமாமகேஸ்வரியின் விளாத்திகுளம் ஒன்றிய இணைச்செயலாலர் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply