shadow

86 நாட்கள் சிறையில் இருந்த நடிகர் திலீப்புக்கு ஜாமீன்

பிரபல கேரள நடிகை கடத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு வழக்கில் சிக்கி கடந்த 86 நாட்களாக சிறையில் இருந்த நடிகர் திலீப் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுவை இரண்டு முறை தள்ளுபடி செய்தது. அதேபோல் அங்கமாலி நீதிமன்றமும் திலீப் ஜாமீன் மனுவை இரண்டு முறையும் தள்ளுபடி செய்துள்ளது

இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி சிறப்பு புலனாய்வுத்துறையினர் சார்ஷீட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் கடைசி வாய்ப்பாக இன்று திலீப் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்று மாலை திலீப் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply