shadow

852 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்: அதிரடி நடவடிக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தெரிவித்த ஒரு தகவலில் 852 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

மேலும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 4 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் 852 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிடமாற்றம் செய்து இருப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்