8 வழிச்சாலை விவகாரம்: பாமக கேவியட் மனுதாக்கல்

8 வழிச்சாலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தம்மை விசாரிக்க கோரும் கேவியட் மனுவை, பாமக வழக்கறிஞர் பாலு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்துள்ள நிலையில் இரு கட்சிகளும் 8 வழிச்சாலை விவகாரத்தில் எதிரும் புதிருமாக செயல்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது என்பதும் இந்த வழக்கை தொடுத்தவர்களில் பாமகவும் ஒன்று என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

Leave a Reply