shadow

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

எனவே இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முன் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என்றும் வெயில் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது