8 வழிச்சாலை தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் அறிவிப்பு

சென்னை சேலம் 9 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றும் கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் நிலத்தின் உரிமையாளர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும் என்றும் இன்று காலை சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது

இந்த தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிலையில் 8 வழிச்சாலைக்கான தீர்ப்பு பின்னடைவு கிடையாது என்ற்ம், தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்தால் சேலம், தருமபுரி மக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் நீதிமன்ற தீர்ப்பு இப்போதைக்கு பொதுமக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply