கைகோர்த்தபடியே காலமான 77 வருட இணைபிரியாத தம்பதி
திருமணம் முடிந்து ஆறு மாதம், ஒரு வருடத்திலேயே விவாகரத்துக்காக கோர்ட் படியேறி வரும் இந்த கால தம்பதிகள் மத்தியில் இங்கிலாந்து தம்பதிகள் 77 வருடம் ஒற்றுமையாக வாழ்ந்து ஒரே நாளில் கைகோர்த்தபடியே மரணம் அடைந்துள்ளனர். இந்த அதிசய தம்பதிகளுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோய்ஸ் என்ற 96 வயது நபர் தனது மனைவி ஃப்ராங் டோட் அவர்களுடன் சமீபத்தில் தங்களது 77வது திருமண நாளை கொண்டாடினர். இந்த நிலையில் ஜோய்ஸ் அவர்களுக்கு திடீரென உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன் மருத்துவமனையில் அவரது மனைவி ஃபிராங் தங்கியிருந்து கணவரை கவனித்து கொண்டார்.
இந்த நிலையில் மறுநாள் காலையில் இருவரும் ஒரே படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்ததை பார்த்த நர்ஸ் அவர்களை எழுப்பி சாப்பாடு கொடுக்க முயன்றார். அப்போதுதான் இருவரின் உயிர் பிரிந்துவிட்டதையும் இருவரும் ஒருவரை ஒருவர் கைகோர்த்தபடியே இருந்ததையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். இந்த செய்தி மருத்துவமனை முழுவதும் பரவி பெரும் பரபரப்பானது. மறைந்த இந்த தம்பதிக்கு 5 குழந்தைகளும், 12 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.