டெல்லி சென்று திரும்பிய மேலும் 75 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களில் ஏற்கனவே 264 பேர்களுக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 74 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனையடுத்து இன்று மட்டும் 75 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 309 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் டெல்லியில் இருந்து திரும்பிய இன்னும் பலருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த பரிசோதனை முடிவு வந்தால் மேலும் அதிர்ச்சி தரும் தகவல்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply