shadow

7 பேர் விடுதலை குறித்து என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்: விஜய்சேதுபதி!

ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை விடுதலை செய்வது குறித்து கேள்வியை பத்திரிகையாளர்கள் அனைவரிடமும் கேட்க தவறுவதில்லை. சமீபத்தில் இந்த கேள்வியை ரஜினியிடம் கேட்டபோது அவர் எந்த 7 பேர் என்று திருப்பி கேள்வி கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 7 பேர் விடுதலை குறித்து நேற்று செய்தியாளர்கள் விஜய்சேதுபதியிடம் கேள்வி கேட்டனர். இந்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய்சேதுபதி, ‘இந்த கேள்வியை என்னிடம் கேட்பதும் அதற்கு நான் பதில் சொல்வதிலும் எந்த புரோஜனும் இல்லை. யார் காலில் விழ வேண்டுமோ, அவர்கள் காலில் விழுந்து ஏதாவது நல்லது நடந்தால் சரி. இந்த விஷயத்தில் என்ன நடக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்’ என்று கூறினார்.

Leave a Reply