7 ஆண்டுகள் சிறை: பிரியங்கா சோப்ராவை எச்சரித்த போலீஸ்
பிரியங்கா சோப்ரா நடித்து வரும்‘ஸ்கை இஸ் பிங்க்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலரில் படத்தின் ஹீரோவுடன், வங்கியை எப்படி கொள்ளையடிக்கலாம் என்பது குறித்து பிரியங்கா சோப்ரா பேசுகிறார். இதனையறிந்த மகாராஷ்டிர போலீசார், அவர்களது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளனர்.
அதில், “வங்கியை கொள்ளையடித்தால் இந்திய தண்டனை சட்டம் 393ன் படி, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று நகைச்சுவையாக எச்சரித்துள்ளனர். இதற்கு பதில் அளித்த ப்ரியங்கா, “கையும் களவுமாக மாட்டிக்கொண்டோம். இனி பிளான் பி தான் செயல்படுத்த வேண்டும்” என்று கூறுகிறார்.
Oops 🙊🙈 caught red handed… time to activate Plan B @FarOutAkhtar!#TheSkyIsPink 💓 //t.co/bvyPgFM6gi
— PRIYANKA (@priyankachopra) September 10, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.