இத்தாலியில் ஒரே நாளில் 662 பேர் பலி: கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

கொரோனா வைரஸ் சீனாவைவிட தற்போது இத்தாலியை தான் மிக மோசமாக தாக்கி வருகிறது அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் மரணம் அடைந்து வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலி நாட்டில் 662 பேர் வைரசால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் கொத்துக்கொத்தாக பிணங்களை பெரிய குழிகளில் போட்டு மொத்தமாக புதைத்து வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன

இத்தாலியில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸால் சுமார் 8000 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி நாடே சுடுகாடாக மாறி வரும் நிலையில் அப்படி ஒரு நிலை நமக்கும் வந்துவிடக்கூடாது என ஒவ்வொரு நாடும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது

Leave a Reply