shadow

652 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு! ஏன் தெரியுமா?

நாட்டின் அச்சுறுத்தலுக்கும், பொதுமக்களின் பாதிப்புக்கும் காரணமான 652 இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் செயல்பட்டு வந்த ஆபாச இணையதளங்கள் ஒழிக்கப்பட்டது போல இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்பட்ட 652 இணணயதளங்கள் அதிரடியாக முடக்கப்பட்டது.

இந்த 652 இணைய தள பக்கங்கள் நீதிமன்ற உத்தரவின் படி முடக்கப்பட்டுள்ளதாகவும் இதேபோல், நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பயங்கரவாதத்தினை ஊக்குவிக்கும் வகையிலும் இயங்கி வரும் இணையதள பக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பின்னர் முடக்கப்படவுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே இந்த வகை இணையதளங்களை முடக்குவது தனிநபர் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று ஒரு தரப்பினர் மத்திய அரசின் ந‌டவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply