சீனாவில் ஜீரோ, இத்தாலியில் 600 க்கும் மேல்: அதிர்ச்சி தகவல்

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் மிக அதிகமாகி அந்நாட்டு மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் அந்நாடு எடுத்த அதிரடி நடவடிக்கையால் தற்போது சீனாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு நேர்மாறாக இத்தாலியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது

கடந்த நான்கு நாட்களாக தினமும் 200 முதல் 300 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 627 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சீனா போல் இத்தாலியிலும் அதிரடி நடவடிக்கை எடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றனர்

Leave a Reply