5 ரூபாய் கொடுத்து இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்
டெல்லியில் உள்ள பாலம் பகுதியில் சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர் அவர்களுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து ஏமாற்றியுள்ளார். இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலம் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் முஹ்மத் ஜைனூல். கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கூலித்தொழிலாளர்களின் மகள்களான சிறுமிகள் இருவர் விளையாடிக் கொண்டிருப்பதை கவனித்துள்ளார்.
5 மற்றும் 9 வயது சிறுமிகளான இருவருக்கும் இனிப்புகள் மற்றும் சாக்லேட்கள் வாங்கித் தருவதாக கூறி, வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
திடீரென தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் ரீதியிலான வன்முறையை எதிர்பார்க்காத சிறுமிகள் இருவரும் அழத்தொடங்கினர். இதனால் அச்சமுற்ற முஹ்மத் ஜைனூல், இது தொடர்பாக யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியதுடன், 5 ரூபாயும் தந்து அனுப்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்த சிறுமிகள் இருவரும் மாலை வரை யாரிடமும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், 5 வயது சிறுமி வலி காரணமாக அழுதுள்ளார். திடீரென சிறுமி அழுவதைப் பார்த்த அவரது தாயார், என்னவென்று விசாரித்ததுடன், சிறுமியின் உடலை சோதித்து பார்த்ததில் பாலியல் பலாத்காரத்தால் ஏற்பட்ட காயங்கள் உள்ளதை கவனித்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து, டெல்லி போலீசாரில் சிறுமிகளின் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து, சிறுமிகளிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்திய போலீசார், முதியவர் முஹ்மத் ஜைனூல் சிறுமிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், 5 ரூபாய் கொடுத்து அதை மறைக்க பார்த்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து, முதியவர் ஜைனூலை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.