shadow

திருப்பதி திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகள் பெறுவதற்கு வசதியாக புதிதாக ஆறு இடங்களில் புதிய பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ராம்பக்கீச்சா, க்வுஸ்துபம் விடுதி, பேருந்துநிலையம், சிஎன்சி, டோல்கேட், எம்பிசி ஆகிய புதிய பதிவு மையங்களை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், உள்ளிட்ட ஏதாவது ஒன்றின் மூலம் அறைகள் பதிவு செய்தால் மொபைல் போனுக்கு அறைகள் உறுதி செய்யப்பட்ட குறுஞ்செய்தி வரும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது