595 கோடி ரூபாய் பறிமுதல்: இன்னும் எவ்வளவுதான் இருக்குது மார்ட்டினிடம்?
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில் அவரிடம் இருந்து கணக்கில் வராத 595 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
மார்ட்டினுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவரது வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சோதனை இன்று முடிவுக்கு வந்தது. இதில் வருமான வரித்துறையினர் மார்ட்டினிடம் 595 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் வைத்திருந்ததை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை, சென்னை,மும்பை. டெல்லி கொல்கத்தா ஆகிய இடங்களில் சுமார் 70 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.